கோவிட்டைப் போல சமநிலையான மனம்; ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு கூடாது - கமல்ஹாசன்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடத்தப்பட்ட இலவச கொரோனா தடுப்பூசி முகாமினை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்.
x
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடத்தப்பட்ட இலவச கொரோனா தடுப்பூசி முகாமினை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா தொற்றின் சமநிலை மனம் அனைவருக்கும் வர வேண்டும் எனவும், ஏழை, பணக்காரர் என பாராமல் அனைவருக்கும் உதவ வேண்டும் எனவும் தெரிவித்தார். சாதிகளைக் கடந்து இது போன்ற நேரத்தில் மக்கள் கைகோர்க்க வேண்டும் என்று கூறிய அவர், முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மறக்காமல் 2வது ஊசியையும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்