"கொரோனா தடுப்பு - அலட்சியம் காட்டவில்லை" - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்

தேர்தல் அறிவிப்புக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த அலட்சியமும் காட்டவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு அலட்சியம் காட்டியதாலேயே கொரோனா பாதிப்பு அதிகரித்தாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்த அனுமதி கோரி, மத்திய அரசுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி தாம் கடிதம் எழுதியதாக சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசிடம் இருந்து தனது கடிதத்திற்கு பதில் வராத நிலையிலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை நடத்தி பணிகளை முடுக்கி விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்