கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் - நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 51 பேர், இடமாற்றம் செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் அறிவித்து உள்ளார்.
கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் - நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு
x
தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 51 பேர், இடமாற்றம் செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் அறிவித்து உள்ளார். 

இதன்படி, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, முதலாவது நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக சிவக்குமார் நியமிக்கப்படுகிறார். இதேபோல், சென்னை வங்கி மற்றும் நிதி நிறுவன மோசடி தொடர்பான சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜவஹர், கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்