அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

செங்கல்பட்டில் அடுத்தடுத்து 3 கடைகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை  - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை
x
செங்கல்பட்டில் அடுத்தடுத்து 3 கடைகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இராட்டிணங்கிணறு பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் கோழிக்கறிக்கடை, உணவகம் ஆகிய கடைகளில் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கைவரிசை காட்டியுள்ளனர். ஒவ்வொரு கடையிலும் இருந்த பணம் என மொத்தம் 21 ஆயிரத்து 500 ரூபாய் பணம் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்