கேரளாவிற்கு கடத்த முயன்ற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து கேரளா-விற்கு கடத்த இருந்த 15 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரளாவிற்கு கடத்த முயன்ற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்
x
தூத்துக்குடியில் இருந்து கேரளா-விற்கு கடத்த இருந்த 15 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். புதூர்பாண்டியபுரம் பகுதியில் வந்த சந்தேகப்படும்படியாக வந்த லாரியை நிறுத்தி, சிப்காட் போலீசார் சோதனை மேற்கொண்டர். அதில் டன் கணக்கில் ரேசன் அரிசிகள் இருந்தது தெரியவந்தது. ஓட்டுனரை பிடித்து விசாரித்ததில், தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து கேரளா-விற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அரிசியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்