பட்டாசு ஆலை வெடி விபத்து - நான்கு பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பான வழக்கில், பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து, மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்து - நான்கு பேர் கைது
x
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில், கடந்த 12ம் தேதி மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் காயங்களுடன், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெடி விபத்து குறித்த வழக்கில்,  பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவேல், சிவக்குமார், பொண்ணுபாண்டி,  ராஜா, வேல்ராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தலைமறைவாக இருந்தவர்களைத் தேடி வந்தனர். இதையடுத்து பொண்ணுபாண்டி, சக்திவேல், அவரது மனைவி ஜெயராமு, சந்தனமாரி ஆகிய 4 பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், மீதம் உள்ள 3 பேரையும் இன்னும் சில தினங்களில் கைது செய்வோம் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்