சூரப்பாவிற்கு எதிரான குற்றச்சாட்டு - கால நீட்டிப்பை கேட்க இருக்கும் விசாரணை குழு?

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டில், விசாரணை குழுவுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சூரப்பாவிற்கு எதிரான குற்றச்சாட்டு - கால நீட்டிப்பை கேட்க இருக்கும் விசாரணை குழு?
x
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது. இதன் 3மாத விசாரணை காலம் வரும் 11-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே முறைகேடு குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் வலுவான ஆதாரங்கள் விசாரணை குழுவுக்கு கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் புகார் அளித்தவர்களை அழைத்து விசாரணை நடத்திய போதும் போதிய அளவிற்கு வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால்  விசாரனைக்கான காலநீட்டிப்பை கேட்கலாமா அல்லது தற்போதைய தகவல்களை அறிக்கையாக சமர்ப்பிக்கலாமா என ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்