100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அரசு அனுமதி - அவசர வழக்காக விசாரிக்க அனுமதி மறுப்பு

நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதியளித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
x
சென்னை, கோபாலபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதியளித்த தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என, மனுதாரர் தரப்பில்,  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை எனக் கூறி, நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்