"பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதா?" - எஸ்றா சற்குணத்திற்கு எல்.முருகன் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதா? - எஸ்றா சற்குணத்திற்கு எல்.முருகன் கண்டனம்
x
பிரதமர்  நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக, எஸ்றா.சற்குணம், பிரதமர் மோடியை ஒருமையில் பேசி விமர்சித்திருப்பதாக கூறி, கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்றா.சற்குணம் பேசும் போது அருகில் இருந்த அரசியல் கட்சித் தலைவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வேதனை என்றும், இதற்கெல்லாம் சேர்த்து தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்