சாலையை காணவில்லை, எடுத்து சென்றது யார்? - பூமாதேவியிடம் பூஜை செய்து முறையிட்ட மக்கள்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து ஜி.என்.மில்ஸ் பேருந்து நிறுத்தம் வழியாக, கணபதி செல்கிறது உருமாண்டம்பாளையம் சாலை.
சாலையை காணவில்லை, எடுத்து சென்றது யார்? - பூமாதேவியிடம் பூஜை செய்து முறையிட்ட மக்கள்
x
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து ஜி.என்.மில்ஸ் பேருந்து நிறுத்தம் வழியாக, கணபதி செல்கிறது உருமாண்டம்பாளையம் சாலை. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அத்திக்கடவு குடிநீருக்காக இந்த சாலையில் ராட்ஷத குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதற்காக, கோயமுத்தூர் மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கத்தினர் குழி தோண்டப்பட்ட இடத்தில், "இங்குள்ள சாலையை காணவில்லை, நெடுஞ்சாலையில் கிணறுகள், இந்த சாலையை எடுத்து சென்றது யார்?" என்று பிளக்ஸ் போர்டு வைத்தனர். மேலும் தேங்காய், பழம் வைத்து பூமாதேவிக்கு பூஜை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்