முன்னாள் காதலனுடன் விஷம் அருந்திய பெண் - திருமணமான பின்னரும் தொடர்ந்த காதல்

ஒசூரில், திருமணமான பெண் தன் முன்னாள் காதலனுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் காதலனுடன் விஷம் அருந்திய பெண் - திருமணமான பின்னரும் தொடர்ந்த காதல்
x
ஒசூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்த மம்தா என்ற பெண்ணுக்கும், கர்நாடகா மாநிலம் சிக்கபெல்லாபூர் பகுதியை சேர்ந்த ஒபிலேஷ் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு முன் மம்தா ஒசூரை சேர்ந்த அருண் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் ம‌ம்தாவின் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்துள்ளது.  இந்த நிலையில் ஒசூர் சந்திரசூடேஷ்வர‌ர் மலைக்கோவிலுக்கு சென்ற அருண் மற்றும் ம‌ம்தா, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அங்கிருந்த மக்கள் இருவரையும் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து ஒசூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்