ரசிகர்களின் கண்ணீர் கடலுக்கு நடுவே நீந்திய எஸ்.பி.பி. - இறுதி ஊர்வலத்தின் நெகிழ்ச்சி தருணங்கள்

சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்திலிருந்து தாமரைப்பாக்கம் பண்ணை இல்லம் வரை எஸ்.பி.பி.யின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நெகிழ்ச்சியான தருணங்களை பார்க்கலாம்
ரசிகர்களின் கண்ணீர் கடலுக்கு நடுவே நீந்திய எஸ்.பி.பி. - இறுதி ஊர்வலத்தின் நெகிழ்ச்சி தருணங்கள்
x
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்டு நுங்கம்பாக்கம் இல்லத்தில்​ பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக இரவு 7.45 மணி வரை வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தாமரைப்பாக்கம் பண்ணை வீடு நோக்கி இறுதி ஊர்வலம் புறப்பட்டது.  மகாலிங்கபுரம், லயோலா கல்லூரி, அமைந்தகரை, கோயம்பேடு வழியாக தாமரைப்பாக்கம் நோக்கி ஊர்வலம் சென்றது. சாலையின் இரு புறத்திலும் நின்ற மக்கள் கைகூப்பி நின்று கண்ணீர் மல்க எஸ்.பி.பி. உடலுக்கு மரியாதை செ​லுத்தினர். வழிநெடுகிலும் ரசிகர்கள் மலர் தூவி எஸ்.பி.பி.க்கு பிரியாவிடை அளித்தனர். பெண் ரசிகர்கள் சிலர் துக்கம் தாங்காமல் விம்மி அழுதது நெகிழ்ச்சியான காட்சியாக இருந்தது. இளைஞர்கள் சிலர் ஆர்வமிகுதியால் இறுதிஊர்வலம் சென்ற வாகனத்தில் தொங்கியவாறு பயணித்தனர். இருசக்கர வாகனங்களிலும் ஒலி எழுப்பியவாறு பயணித்தனர். 

செங்குன்றம் பகுதியை சென்றடைந்த போது ரசிகர்கள் சிலர் பட்டாசு வெடித்தனர். தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு எஸ்.பி.பி.யின் உடல் இரவு 10.45 மணியளவில் சென்றடைந்தது. பண்ணை வீட்டிற்குள் உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் இருப்பினும் வீட்டின் வெளியே ரசிகர்கள் இரவு முழுவதும் கண்ணீர் அஞ்சலி பதாகைகளுடன் குழுமியவாறு இருந்தனர். ரசிகர்களில் ஒருவர் நாதஸ்வரத்தில் எஸ்.பி.பி பாடிய பாடலை இசைத்து இசையஞ்சலி செலுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்