சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாத அரசு போக்குவரத்து கழகம் - அரசு பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு

அரசு போக்குவரத்து கழகம் சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்தாததால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் அரசு பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாத அரசு போக்குவரத்து கழகம் - அரசு பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு
x
அரசு போக்குவரத்து கழகம், சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்தாததால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில், அரசு பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். வழக்கமாக போக்குவரத்து கழகம் சார்பில் கிருஷ்ணகிரி சுங்க சாவடிக்கு அரசு பேருந்துகளுக்கு கட்டணம் செலுத்தி பாஸ் எடுப்பது வழக்கம். ஆனால் தற்போது பேருந்து சேவை துவங்கி உள்ள நிலையில் போக்குவரத்து கழகம் இதுவரையில் கட்டணம் செலுத்த வில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக பேருந்துகள் சுங்க சாவடியில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்த நிலையில், மாற்று பேருந்தில் பயணம் மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்