பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி - தமிழகத்தில் இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல்

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி நடந்துள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி - தமிழகத்தில் இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல்
x
தமிழகத்தில் சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது  தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மூளையாக செயல்பட்ட ஒரு புரோக்கர் உட்பட கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் என ஐந்து பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் போர்வையில் மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்