15 ஆண்டுகளாக திறக்கப்படாத பங்களா? - ஒரே ஒரு பாம்பு, 'பேய் பங்களா' என பரவும் அச்சம்

பாழடைந்து கிடக்கும் அரசுப் பங்களா ஒன்று, திரைப்படத்தில் வருவதைப் போல் அமானுஷ்யமாக மாறி அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.... உண்மை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
15 ஆண்டுகளாக திறக்கப்படாத பங்களா? - ஒரே ஒரு பாம்பு, பேய் பங்களா என பரவும் அச்சம்
x
தஞ்சையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய பகுதிகளில் ஒன்றான தெற்கு வீதியில், இருக்கிறது இந்த வீடு. ஒரு காலத்தில் அறநிலையத்துறை ஆணையர்கள் தங்கிய இந்த பங்களா, கடந்த 15 ஆண்டுகளாக பூட்டியே உள்ளது.அந்த வீட்டின் முன்வாசல் கதவு துருப்பிடித்து கிடக்கிறது. சிலந்தி வலை பின்னல், காரை பெயர்ந்த சுவர், வீட்டின் மொத்த பகுதியையும் ஆக்கிரமித்த ஆலமர வேர் என பேய் படத்துக்கு செட் போட்டதை போல் மிரட்டுகிறது. அதில், தங்கிய அதிகாரி ஒருவர், வெளியூர் செல்லும்போது மரணம் நிகழ்ந்ததால், அன்று முதல் ஒதுக்கப்பட்ட இந்த பங்களாவில், 15 ஆண்டுகளாக ஒரே ஒரு பாம்பு சுற்றி வருவதாக ஏகத்துக்கும் மிரட்டுகின்றனர் அப்பகுதிவாசிகள். ஆனால், அந்த வீட்டில் பேய் என்ற ஒன்று இல்லை என்பதற்கு அடையாளமாக சில ஆக்கிரமிப்பு முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆக வதந்தி ஒன்று, நாளடைவில் உண்மையாக மாறிநிற்பதே நிதர்சனம். ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை...

Next Story

மேலும் செய்திகள்