நாளை முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் - நியாய விலை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் திட்டமிட்டபடி ரேஷன் கடை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என றிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் - நியாய விலை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு
x
தமிழகத்தில் நாளை முதல் திட்டமிட்டபடி ரேஷன் கடை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும்  என றிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக ஊழியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என  தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்