"எஸ்.பி.பி உடல்நிலையில் மாற்றமில்லை" - மருத்துவமனை வட்டாரம் தகவல்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் பெரியளவில் மாற்றம் இல்லை என மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி. கடந்த ஐந்தாம் தேதி முதல் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வென்டிலேட்டர் மற்றும் எக்மோ ஆகிய உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச மருத்துவ குழு மூலம் உயர் தர சிகிச்சை அளித்தும், தற்போது வரை எஸ்.பி.பி. உடலில் பெரிய மாற்றமில்லை என மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. உயர்வகை உபகரணங்கள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதால் அவரின் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்