சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி பலியான பரிதாபம் - சிறுவன் மரணம் குறித்து போலீசார் விசாரணை

கோவையில் சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி பலியான பரிதாபம் - சிறுவன் மரணம் குறித்து போலீசார் விசாரணை
x
கோவையில் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி. இவர் அசாமை சேர்ந்த பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 4 வயதில் கபிலேஷ் என்ற மகன் இருந்தார். கருத்து வேறுபாடால் கணவனை விட்டு பிரிந்த பிங்கி லிங்கேஷ் என்பவருடன் வடவள்ளியில் வாழ்ந்து வந்துள்ளார். குழந்தை கபிலேஷ் சிக்கன் சாப்பிட்ட  நிலையில் அது அவரின் தொண்டையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகும் சிறுவனை காப்பாற்ற முடியாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் தன் மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காமாட்சி தெரிவித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் சடலம் தந்தை காமாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்