ஊரடங்கு தளர்வா, நீட்டிப்பா? அடுத்து என்ன? - 30ம் தேதி முதலமைச்சர் முக்கிய ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஜூலை 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து, நாளை 30ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவிடம் கருத்துக்களை கேட்க உள்ளார். அப்போது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. மேலும், கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக மருத்துவக்குழு பரிந்துரை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு, தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்து தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story