ஆக.1 ல் பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு - 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
x
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடிவேரி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நவம்பர் 28ம் தேதி வரை 120 நாட்களுக்கு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்