+2 மறுதேர்வு - 8 மாணவர்களுக்கு 8 மையங்கள் அமைப்பு

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மறுதேர்வு எழுத 8 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அவர்கள் தேர்வு எழுத ஒவ்வொருவருக்கும் ஒரு மையம் என 8 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
+2 மறுதேர்வு - 8 மாணவர்களுக்கு 8 மையங்கள் அமைப்பு
x
வரும் 27ஆம் தேதி நடைபெறும் பிளஸ் 2 மறுதேர்வு  தேர்வுக்காக மதுரை கல்வி மாவட்டத்தில் 8 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 13 தனித்தேர்வர்கள் பிளஸ் 2 மறுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு நான்கு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் மதுரை மாவட்டத்தில் 14ஆயிரத்து 864 மாணவர்கள், 17 ஆயிரத்து 862 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரத்து 640 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.  அவர்களில் 32 ஆயிரத்து 726 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்