பென்னிக்ஸ்-ஜெயராஜ் இல்லத்தில் 2 மணி நேரம் விசாரணை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, ஜெயராஜ் இல்லத்திலும், காவலர்களிடமும், எழுத்தரிடமும் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவடைந்தது.
பென்னிக்ஸ்-ஜெயராஜ் இல்லத்தில் 2 மணி நேரம் விசாரணை
x
சாத்தான்குளம் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சாமதுரை, செல்லத்துரை, வெயிலுமுத்து ஆகிய மூன்று பேரை காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள் அவர்களை சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இல்லத்தில் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தினர். அப்போது ஜெயராஜின் உறவினர்களான தாவீது மற்றும் தேசிங்கு ராஜா ஆகியோரிடமும் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றனர். இதை தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலைய எழுத்தர் பியூலாவிடமும் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்