புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு - 300க்கும் மேற்பட்ட மக்கள் சாலைமறியல்

தஞ்சாவூரில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு - 300க்கும் மேற்பட்ட மக்கள் சாலைமறியல்
x
கருப்பூர் கிராம மக்கள், திருக்காட்டுப்பள்ளி-கண்டியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மதுக்கடை திறப்பு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர். புதிய டாஸ்மாக் கடை திறந்தால், அப்பகுதி பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும்  மது அருந்தும் பழக்கம் இல்லாத இளைஞர்களுக்கும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். விவசாயிகள், விவசாய கூலிகள் அதிகம் உள்ள இடத்தில் டாஸ்மாக் திறந்தால், அவர்களின் வாழ்வாதாரம் மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என கருப்பூர் கிராமமக்கள் கூறினர். தகவல் அறிந்து அங்கு வந்த திருவையாறு வட்டாட்சியர் இளமாருதி, சமரச பேச்சுவார்த்தை நடத்தி மதுக்கடை திறக்கப்படாது என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து, சாலைமறியலை பொதுமக்கள் கைவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்