தேர்தல் நடத்தும் விதியில் திருத்தம் தவறானது - ஸ்டாலின் கடிதம்
தேர்தல் நடத்தும் விதிமுறையில் திருத்தங்கள் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் நடத்தும் விதிமுறையில் திருத்தங்கள் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், கடிதம் எழுதியுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்டோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ள அதிகாரம் படைத்த பழைய நடைமுறையே தொடரவும், தற்போதைய திருத்தம், குந்தகம் விளைவிக்கும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்கப்படும் என தெரிகிறது.
Next Story