செல்லூர் ராஜூ விரைவில் பூரண குணமடைய துணை முதலமைச்சர் விருப்பம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
செல்லூர் ராஜூ விரைவில் பூரண குணமடைய துணை முதலமைச்சர் விருப்பம்
x
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பொதுப் பணியில் ஈடுபடும் அனைவரும் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.  

அமைச்சர் செல்லூர் ராஜூ விரைவில் நலம் பெற வேண்டும்" - அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என தெரிவித்ததாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்டாலின், எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு தொற்று பரவல் அதிகரித்து இருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்