"மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
* இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், Card-1 கிரிமிலேயர் என்ற கருதுகோள் குறித்து, பி.பி.சர்மா குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரிப்பதோடு,
* ஓபிசி வகுப்பில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாகச் சம்பளத்தைச் சேர்க்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
* மேலும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டினை ரத்து செய்வதோடு,
* இடஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்ட பின்னர் சில இடங்களை தனியாக வைத்திருப்பது உட்பட, மாநில அரசுகள் தங்களுக்கென சொந்தத் தேர்வு முறையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
* மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
* நாட்டில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலன் பாதுகாக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story