கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பட்டியல் - மண்டல வாரியாக விவரங்களை வெளியிட்ட மாநகராட்சி

சென்னையில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை, மண்டல வாரியாக, மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பட்டியல் - மண்டல வாரியாக விவரங்களை வெளியிட்ட மாநகராட்சி
x
சென்னையில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை, மண்டல வாரியாக, மாநகராட்சி  வெளியிட்டுள்ளது. 

* அந்த பட்டியலில், திருவொற்றியூர் மண்டலத்தில் ஆயிரத்து 176 பேரும், மணலியில் 513 பேரும் மாதவரத்தில் 910 பேரும் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

* தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 856 பேரும்,  ராயபுரத்தில் 2 ஆயிரத்து 239 பேரும், திருவிக நகரில் ஆயிரத்து 832 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர். 

* அம்பத்தூர் மண்டலத்தில் ஆயிரத்து 259 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 2 ஆயிரத்து 317 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 965 பேரும் , கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 680 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

* வளசரவாக்கத்தில் ஆயிரத்து 158 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 872 பேரும், 
அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 682 பேரும்  பெருங்குடியில்   821 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 493 பேரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்