சாத்தான்குளம் சம்பவம்: "302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்?" - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம்: 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
x
அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், கொலையாளிகளை ஐபிசி  302 வது பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என நான் நினைவூட்ட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்ன செய்ய போகிறது அரசு என்றும் அவர் கூறியுள்ளார்.  கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள் என்றும்,  இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி என்றும் அவர் கூறியுள்ளார்.  நீதிபதிக்கே மிரட்டலா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்