சாத்தான்குளம் சம்பவம்: "பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி தேவை" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதி உதவியைவிட நீதி தேவை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதி உதவியைவிட நீதி தேவை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர்கள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கை பெயரளவில் இருப்பதாக விமர்சித்த கமல், உண்மை நிலையை கண்டறிய முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றும், ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரை போல் இனி எந்த ஒரு அப்பாவியும் உயிரிழக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Next Story