மாநகர் முழுவதும் தளர்வு இல்லாத ஊரடங்கு - வெறிச்சோடி கிடக்கும் முக்கிய சாலைகள்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் சென்னையில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது.
மாநகர் முழுவதும் தளர்வு இல்லாத ஊரடங்கு - வெறிச்சோடி கிடக்கும் முக்கிய சாலைகள்
x
மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களில்  கடைகள் மூடப்பட்டுள்ளன. எல்லை பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் யாரும் உள்ளே, வெளியே செல்ல முடியாதபடி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட காய்கறி,  மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்க இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், 500க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். 
தேவையின்றி வெளியில் நடந்து செல்லும் பொதுமக்களை எச்சரித்த போலீசார், வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா அதிகம் பாதித்த ராயபுரம், தண்டையார்பேட்டை திருவிக நகர் உள்ளிட்ட மண்டலங்களில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்