பூந்தமல்லி துணை தாசில்தாருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தாருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பூந்தமல்லி துணை தாசில்தாருக்கு கொரோனா
x
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தாருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தாசில்தார் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே குன்றத்தூர் பெண் தாசில்தாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருவது வருவாய்த்துறையினரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்