முழு ஊரடங்கு - முக கவசம் இல்லாதவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் முக கவசம் அணியாமல் வெளியில் நிற்பவர்களை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் விரட்டியடித்தனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிபவர்கள், வீட்டு வாசலில் அமர்ந்து கதை பேசுபவர்கள் மற்றும் முக கவசம் அணியாமல் வெளியில் நிற்பவர்களை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் விரட்டியடித்தனர். இதனை படம் பிடித்த இளைஞர் ஒருவரின் செல்போனை பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்பினர். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் சாலைகளில் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Next Story