உயர் கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயர் கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா
x
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த அவர், பெருங்குடி, அடையாறு, சோழிங்க நல்லூர் மண்டலங்களில் பணியில் இருந்தபோது காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்கு பின்  அமைச்சர் அன்பழகன் வீட்டிற்கு சென்று  தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தபட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Next Story

மேலும் செய்திகள்