ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி - மர்ம நபர்கள் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது.
ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி - மர்ம நபர்கள் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது. இன்று காலை கடப்பாரை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அப்போது அபாய ஒலி ஒலிப்பதை கேட்டு அங்கு விரைந்த போலீசாரை கண்டது முக கவசம் அணிந்து இருந்த கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்