சென்னையில் டாஸ்மாக் கடைகள் விரைவில் திறப்பு? - தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

சென்னையில் ஒரு சில டாஸ்மாக் கடைகள் முன்பு தனி மனித இடைவெளியை பின்பற்றுவதற்கு ஏதுவாக தடுப்புகள் அமைக்கும பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் டாஸ்மாக் கடைகள் விரைவில் திறப்பு? - தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்
x
கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் மூடப்பட்டன. கடந்த சில வாரங்களாக சென்னை காவல் எல்லை தவிர பிற மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு தொடர்பாக  அறிவிக்கப்பட்ட தளர்வுகளிலும் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகளில் தனி மனித இடைவெளியை பின்பற்றுவதற்கு ஏதுவாக தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்