குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து மனு - தணிகாச்சலம் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணை

தணிக்காசலம் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து மனு - தணிகாச்சலம் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணை
x
தணிக்காசலம் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக கூறி தவறான தகவலை பரப்பியதாக தணிகாச்சலம் கைது செய்யப்பட்டார். அவர் மீது தொடர்ச்சியான இந்த நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, இதனை எதிர்த்து தணிகாச்சலம் சார்பில்  தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் பாரம்பரிய மருத்துவம் செய்து வரும் தனக்கு, கடலூரில் முறையான சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், இதுவரை தன்னுடைய சிகிச்சையால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். எனவே குண்டர் சட்டத்தை ரத்து செய்வதோடு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்