தடுப்பூசி போட்ட போது நடந்த விபரீதம் - வலியில் கதறும் குழந்தை, பதறித் துடிக்கும் தாய்

திருச்சி அருகே பச்சிளம் குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசி அதன் தொடையில் உடைந்து உள்ளுக்குள் நிற்பதால் வலியில் குழந்தையும் வேதனையில் தாயும் உள்ளனர்.
தடுப்பூசி போட்ட போது நடந்த விபரீதம் - வலியில் கதறும் குழந்தை, பதறித் துடிக்கும் தாய்
x
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மரவனூரைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வி. இவருக்கு கடந்த மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்த நிலையில் 
குழந்தைக்கு கடந்த 10ஆம் தேதி காலை முதல் தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மற்றொரு காலில் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்ததால் அதன் தொடையை பார்த்த போது உடைந்து போன ஊசியின் முனை குழந்தையின் தொடைக்குள் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாமரைச்செல்வி குழந்தையின் தொடையில் உள்ள ஊசியை எடுத்து விடுமாறு கூறியதுடன் அஜாக்கிரதையாக செயல்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்