ஊரடங்கை மீறிய பிரியாணி பிரியர்கள் - கைது வரை கொண்டு சென்ற கறி விருந்து

ஊரடங்கை மதிக்காமல் கறி விருந்து நடத்தி டிக் டாக் செயலியில் பதிவிட்ட இளைஞர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட  வில்லியநல்லூர் கிராமத்தில்   அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் , பிரியாணி சமைத்து சாப்பிடும் வீடியோக்களை டிக் டாக் செயலியில் பதிவேற்றியுள்ளனர். வெளியூரில் இருந்து சில இளைஞர்கள் சொந்த ஊர் வந்த‌தால் அதனைகொண்டாடும் விதமாக இந்த கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஊரடங்கு காரணமாக சமூக விலகலை கடைபிடிக்க அரசு அறிவுறுத்திவரும் நிலையில்,  இந்த வீடியோவில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூட்டமாக உணவு சமைத்து சாப்பிட்டது சர்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விசாரணை மேற்கொண்ட மணல்மேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியைச் சேர்ந்த 10 பேரை கைது செய்துள்ளனர். .

Next Story

மேலும் செய்திகள்