"கொரோனா உதவி - உத்தரவை மீறினால் நடவடிக்கை"
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கொரோனா நிவாரண உதவி தொடர்பாக, சில முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது.
பொது மக்களுக்கு நேரடியாக உதவி செய்யும் தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை, பொது மக்களுக்கு நேரடியாக வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கொரோனா தொற்று நடவடிக்கைகளுக்கு நிதிஉதவி செய்ய விரும்பினால், அதனை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* பொருட்களாக வழங்க விரும்பினால், சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* இதனை மீறி செயல்படும் நபர்கள் மீது, ஊரடங்கு உத்தரவை மீறியதாக கருதி, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story