கொரோனா சிகிச்சை மையமாக மாறும் பொறியியல் கல்லூரி - 1000 படுக்கைகள் அமைக்க திட்டம்
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கபட்டிருந்தாலும், அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக செங்கிப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 1000 படுக்கைகள் போடப்பட உள்ளன. இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது இதேபோல் செங்கிப்பட்டியில் உள்ள டி.பி.சானிடோரியமும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மையமாக தமிழக அரசின் அறிவிப்பிற்கு இணங்க மாற்றப்படுகிறது
Next Story