முட்டை, கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா என வாட்ஸ்ஆப்பில் வதந்தி பரப்பியவர் கைது
கோழிக்கறி மற்றும் முட்டையை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதாக வாட்ஸ்ஆப் மூலம் வதந்தி பரப்பியதாக நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோழிக்கறி மற்றும் முட்டையை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதாக வாட்ஸ்ஆப் மூலம் வதந்தி பரப்பியதாக நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த பாபு சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அவர் பொய்யான செய்தியை
பரப்பியதை ஒப்பு கொண்டார். அவரை உடனடியாக
கண்டுபிடித்து கைது செய்த போலீசாரை மாவட்ட எஸ்.பி. அருளரசு வெகுவாக பாராட்டினார்.
Next Story