வேலூரில் 29 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைப்பு - துரைமுருகன் குடும்பத்திற்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கும் சீல்வைப்பு

வேலூர் மாவட்டம் முழுவதும் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த 29 தனியார் குடிநீர் ஆலைகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வேலூரில் 29 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைப்பு - துரைமுருகன் குடும்பத்திற்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கும் சீல்வைப்பு
x
வேலூர் மாவட்டம் முழுவதும் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த 29 தனியார் குடிநீர் ஆலைகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். குறிப்பாக, காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் குடும்பத்திற்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு, அதிகாரிகள் சீல்வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சண்முக சுந்தரம், வேலூர் மாவட்டம் முழுவதும் 37 குடிநீர் ஆலைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும், அந்த ஆலைகளும் முழுமையாக சீல்வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில்,  நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்