வீட்டில் வளர்க்கப்பட்ட 2 நாய்கள் சுட்டுக்கொலை - போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு நாய்களை முன்விரோதம் காரணமாக, சுட்டுக்கொன்றவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வீட்டில் வளர்க்கப்பட்ட 2 நாய்கள் சுட்டுக்கொலை - போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு நாய்களை முன்விரோதம் காரணமாக, சுட்டுக்கொன்றவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கல்லப்பாடியை சேர்ந்த விசுவநாதன் என்பவரது வீட்டில் உள்ள நாய்கள், அண்டை வீட்டில் வசிக்கும் நாகராஜனின் கோழியை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்த நிலையில், நாகராஜன், வேட்டைக்காரர்களை அழைத்து வந்து சுட்டதில், விஸ்வநாதனின் 2 நாய்கள் உயிரிழந்தன. நாகராஜன் தரப்பு தாக்கியதில் விஸ்வநாதனும் படுகாயமடைந்தார். 


Next Story

மேலும் செய்திகள்