ஒத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி மறைமுக தேர்தல் : மார்ச் 4ஆம் தேதி தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஊரக - உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது, ஒத்தி வைக்கப்பட்ட சில பதவிகளுக்கான தேர்தல், மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி மறைமுக தேர்தல் : மார்ச் 4ஆம் தேதி தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
ஊரக - உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது, ஒத்தி வைக்கப்பட்ட சில பதவிகளுக்கான தேர்தல், மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக, மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மற்றும் துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த பதவிகளுக்கான தேர்தல், மார்ச் 4ஆம் தேதி நடத்த, தமிழக தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மொத்தம் 102 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்