மெரினா கடற்கரை பகுதியில் மீன் விற்பனையை முறைப்படுத்த உத்தரவிட கோரி வழக்கு - மாநகராட்சி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் விற்பனையை முறைப்படுத்த உத்தரவிட கோரிய வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மெரினா கடற்கரை பகுதியில் மீன் விற்பனையை முறைப்படுத்த உத்தரவிட கோரி வழக்கு - மாநகராட்சி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் விற்பனையை முறைப்படுத்த உத்தரவிட கோரிய  வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லூப்சாலை பகுதியில்  75 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக மீன் சந்தை  அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், நிரந்தரமாக மீன் சந்தை அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

அதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், அந்த நடவடிக்கைகளை தொடர மாநகராட்சிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 1970ம் ஆண்டுகளில் சென்னையில் புயலில் சேதமடைந்த லூப்சாலை - பெசன்ட்நகரை  இணைக்கும் சாலையை மீண்டும் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் 
உள்ளதா என்பதை ஆய்வு  செய்து, 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் 
செய்யவும்  மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்