சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு - உத்தரவு

சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, 30 நாட்களில் தனது அறிக்கையை, அரசுக்கு அளிக்க வேண்டுமென,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு - உத்தரவு
x
சென்னை மாநகராட்சியில் சொத்துவரி விதிக்க, விதிகளை வகுக்கக்
கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக துறை துணை செயலர் நேரில் ஆஜராகி,  விளக்கமனுவை தாக்கல் செய்தனர். விசாரணையின்போது, சென்னையில் கூவம், அடையாறு, பங்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் மாசு ஏற்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்தும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை மூலம் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் பதிலளித்தார். மேலும், கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக 400 கோடி மதிப்பில் மேற்கொள்ளபட உள்ள திட்டத்திற்கு, 30 நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும் என தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது, குப்பைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக 2-ஆம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, மத்திய வீட்டு வசதி துறை செயலாளர் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மாநகராட்சி சொத்துவரியை உயர்த்துவது தொடர்பாக ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள குழு 30 நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்கவும், அந்த அறிக்கை மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்