அமைச்சர் வேலுமணி மீதான புகார் - முகாந்திரம் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் மனு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் வேலுமணி மீதான புகார் - முகாந்திரம் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் மனு
x
சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, ஆரம்பகட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் வழக்கை முடித்து வைக்க கோரி, தலைமைச் செயலாளர் சண்முகம் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரித்ததாகவும் இந்த விசாரணையில் அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்