தேயிலை தோட்டத்தில் கருஞ்சிறுத்தை மர்ம மரணம் - விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறை விசாரணை

நீலகிரி மாவட்டம் தனியார் தேயிலை தோட்டத்தில் 2 வயது மதிக்கத்தக்க கருஞ்சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.
தேயிலை தோட்டத்தில் கருஞ்சிறுத்தை மர்ம மரணம் - விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறை விசாரணை
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கடக்கோடு கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் 2 வயது மதிக்கத்தக்க கருஞ்சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், கருஞ்சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து, கருஞ்சிறுத்தை விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்