பெட்ரோல் நிலையம் உள்ளே நுழைந்த அரசுப் பேருந்து
ஓசூர் அருகே பெட்ரோல் நிலையத்தின் உள்ளே நுழைந்த அரசு பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர் அருகே பெட்ரோல் நிலையத்தின் உள்ளே நுழைந்த அரசு பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து ஓசூருக்கு சென்ற அரசு விரைவு பேருந்து, பணிமனையில் இடம் இல்லாததால், அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நிறுத்த ஓட்டுநர் கண்ணன், முயன்றுள்ளார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பெட்ரோல் நிலையம் உள்ளே புகுந்து அங்கிருந்த கண்டெய்னர் பெட்டியின் மீது மோதி நின்றது. ஓட்டுநரின் திறமையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டாலும், 2 இருசக்கர வாகனமும், கண்டெய்னர் பெட்டியும் சேதம் அடைந்தன.
Next Story