1503 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால், தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 503 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
1503 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்
x
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதன்படி  ஆயிரத்து 503 பேர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதல்கட்டமாக 9 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்